என் அப்பாவிடம் லைசன்ஸுடன் துப்பாக்கி உள்ளது.. பிரபல நடிகை எச்சரிக்கை..

சர்ச்சைகளுக்குப் பிரபலமாகி வரும் நடிகை கங்கனா ரனாவத் டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தவர் அவர்களை பயங்கர வாதிகள் எனச் சித்தரித்தார். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சிகளைத் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என விமர்சித்தார்.விவசாயிகளுக்கு எதிராக கங்கனா கூறிய சர்ச்சை கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய பிரதேச முன்னாள் அமைச்சர் சுக்தேவ் பான்சே நடிகை கங்கனாவை ஆபாசமாகத் திட்டினார்.அவரின் கருத்து குறித்து கங்கனா பதிலளித்துள்ளார். மாஜி அமைச்சரின் பெயரைச் சொல்லாமல் தான் ஒரு ராஜ்புத் பெண் என்றும், என்னால் எலும்புகளை உடைக்க முடியும் என்றும் பதிலளித்தார்.

மேலும் அவர் கூறும்போது "இந்த முட்டாள் யார் என்று அவருக்குத் தெரியுமா நான் தீபிகாவோ, கேத்ரீனா அல்லது அலியாவோ இல்லை, ஐட்டம் பாடல்களுக்கு என்னை ஆடும்படி கேட்டபோது அதற்கு மறுத்திருக்கிறேன். பெரிய ஹீரோ (கான் / குமார்) படங்களைச் செய்ய மறுத்து விட்டேன், அதனால் எனக்கு எதிராகப் பாலிவுட்டில் ஒரு அணி செயல்படுகிறது. நான் ஒரு ராஜ்புத் பெண், நான் எலும்புகளை அசைக்கவில்லை. நான் எலும்புகளை உடைக்கிறேன் "என்று கங்கனாவின் ட்வீட் கூறுகிறது.

மேலும் அவர் பரபரப்பான ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார்.கங்கனா தனது தந்தையிடம் உரிமம் பெற்ற துப்பாக்கி இருப்பதாகக் கூறியுள்ளார், அவர் குண்டா எனப் பெயர் பெற்றவர். அவரிடம் 15 வயதில் சண்டைபோட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறினேன். பிறகு 15 வயதில் முதல் பாகி ராஜ்புத் பெண்ணாக ஆனேன், "என்று கங்கனா ட்வீட் செய்துள்ளார்.கங்கனா பல்வேறு விஷயங்களில் பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். அதேபோல் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதும் சாடினார். விவசாயிகளை பயங்கர வாதிகள் என்றார்.

More News >>