ரவுடி செல்லத்துரையின் கொலை வழக்கில் புதிய மாற்றம்.. போலீஸ் அதிரடி

சேலம் ரவுடியான செல்லதுரையின் கொலைவழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளி ஆத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்ததால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் கிச்சிப்பாளையத்தின் பிரபல ரவுடியான செல்லத்துரையை கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி 30 பேர் சேர்ந்த கும்பல் கொடூரமான முறையில் வெட்டி சாய்ந்தது. இதை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல நாட்களாக தேடப்பட்ட ரவுடிகளான மோசஸ், டெனிபா, சூரி போன்றவர்கள் உட்பட இதுவரை 29 பேர் செல்லத்துரையின் கொலை வழக்கில் சிக்கியுள்ளனர்.

சேலத்தில் இருந்து கொண்டே இந்த கொலைக்கு திட்டம் தீட்டிய முக்கிய குற்றவாளியான ரவுடி வசூர் ராஜா தலைமறைவானார். இதனால் போலீஸ் தீவிர தேடுதல் வேட்டையில் இறக்கியபொழுது ரவுடி வசூர் ராஜா ஆத்தூர் குற்றவியியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பிறகு இவருக்கு கொரோன பரிசோதனை செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இவரை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவர கூடும் என்பதால் அவரை போலீசார் காவலில் எடுக்க நடவடிக்கைகளை நடத்தி வருகின்றனர்.

More News >>