தமிழ் படத்தில் மல்லிகா ஷெராவத்..

ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம் கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ பாம்பாட்டம் “ நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள். தமிழில் நீண்ட இடை வெளிக்கு பிறகு இளவரசி நாகமதி காதபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார்.

மற்றும் இவர்களுடன் ஆசிஷ் வித்யார்த்தி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்னும் ஏரளாமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். 1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதை, ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த இந்த படத்தின் முதல் கட்ட படப் பிடிப்பு முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்க உள்ளது. மிகப்பெரிய பொருட் செலவில் 500 குதிரைகளுடன் மல்லிகா ஷெராவத் நடிக்கவுள்ள முக்கியமான காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள்.

இதற்காக குதிரைகளும் குதிரை பயிற்சியாளர்களையும் திரட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை இனியன் ஜே ஹாரீஸ்மேற்கொள்கிறார். அம்ரிஷ் இசை அமைக்கிறார். பா.விஜய், யுகபாரதி, விவேகா பாடல்கள் எழுதுகிறார். சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்கிறார். ஏ.பழனிவேல் கலை அமைக்கிறார். சூப்பர் சுப்பராயன் ஸ்டண்ட் அமைக்கிறார். தினேஷ், சிவசங்கர் நடனம் அமைக்கின்றனர். பண்ணை ஏ இளங்கோவன் இணை தயாரிப்பு செய்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் வி.சி.வடிவுடையான்.

More News >>