மெழுகுவர்த்தி ஏந்தி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்ற அரசைக் கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் , காலமுறை ஊழியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி பணியாளர்கள் நாளை ஜெயலலிதா பிறந்த நாளை அதிமுகவினர் விளக்கேற்றி கொண்டாடுவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் முன்னதாகவே பிறந்தநாள் பரிசாக அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்க கோரி கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

More News >>