இளம்பெண்ணைக் கொன்று இதயத்தை உருளைக் கிழங்குடன் சேர்த்து சமைத்து சாப்பிட்ட கொடூரம்

4 வயதே ஆன சிறுமி உள்பட 3 பேரை கொலை செய்த கொலையாளி, அதில் ஒரு இளம்பெண்ணின் இதயத்தை அறுத்து எடுத்து அதை உருளைக் கிழங்குடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமாவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.கடந்த பிப்ரவரி 9ம் தேதி தான் அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா நகரில் மனதைப் பதற வைத்த இந்த பயங்கர சம்பவம் நடந்தது. இப்பகுதியை சேர்ந்த லாரன்ஸ் பால் ஆண்டர்சன் என்பவர் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தன்னுடைய மாமா, இவரது மனைவி மற்றும் இவர்களது பேத்தியான 4 வயது சிறுமி ஆகியோரை கத்தியால் சரமாரியாகத் தாக்கினார்.

இதில் மாமாவின் மனைவி தவிர மற்ற 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த மாமாவின் மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஆண்டர்சனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் ஆண்டர்சனிடம் விசாரணை நடத்திய போலீசார் விசாரணையின் போது கிடைத்த தகவல்களை நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையாகத் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் தான் நெஞ்சை உறைய வைக்கும் ஆண்டர்சனின் கொடூரம் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தன்னுடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளம்பெண்ணைக் குத்திக் கொலை செய்த ஆண்டர்சன், அந்த இளம்பெண்ணின் உடலில் இருந்து இதயத்தை அறுத்து எடுத்து பின்னர் அதை உருளைக் கிழங்குடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டுள்ளார்.

இதன் பிறகு அதை தன்னுடைய மாமாவின் வீட்டுக்குக் கொண்டு சென்று அங்கிருந்தவர்களுக்கும் கொடுத்துச் சாப்பிடக் கட்டாயப்படுத்தி உள்ளார். பேய் பிடிக்காமல் இருப்பதற்காகவே அவர் இந்த செயலில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்த இந்த தகவலைக் கேட்டு அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

More News >>