ஃபேஸ்புக் நீக்கிய போலி கணக்குகள் எத்தனை கோடி தெரியுமா?

தவறான தகவலை பரப்புவதை தடுக்கும்வண்ணம் கோடிக்கணக்கான போலி கணக்குகளை நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் அறுபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் தகவல்களின் உண்மைதன்மையை சரி பார்க்கும் எண்பது நெட்வொர்க்குகள் மூலம் போலி கணக்குகளை இனம் காண்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் பதிவுகளில் உள்ள தகவல்கள் சரியானவையல்ல என்று நெட்வொர்க்குகள் கருதினால் 'தவறானது' என்ற தகவல் அப்பதிவிலேயே சேர்க்கப்படும். அதன் மூலம் ஃபேஸ்புக்கை தொடர்ந்து பயன்படுத்துவோர் அப்பதிவு உண்மை தன்மையற்றது என்று புரிந்துகொள்வர். அப்படிப்பட்ட பட்சத்தில் 95 சதவீத பயனர்கள் அவற்றை கிளிக் செய்யவே மாட்டர் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாங்கள் நிர்ணயித்துள்ள சமுதாய தர நிர்ணய விதிமுறைகளை மீறும் பயனர்கள் மற்றும் குழுக்கள் பதிவிட முடியாமல் தடுப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. 2020 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 130 கோடி (1.3 பில்லியன்) போலி கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

More News >>