இது போதும் எனக்கு இது போதுமே! எடப்பாடி பழனிசாமி அறிவித்த அறிக்கைகள்..

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறயுள்ளது. இதனால் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சூப்பர் டூப்பர் திட்டங்கள் குறித்து இன்று அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அதிமுக சார்பில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாயும் மற்றும் 6 மாசம் கேஸ் சிலிண்டர் இலவசம் என்று அறிவிப்பு வெளியாகியது.

இந்நிலையில் இன்று வெளியான அறிக்கையில் சொந்தமாக வீடு இல்லாதவர்களுக்கு அரசாங்கமே நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும். குலவிளக்கு திட்டத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் தோறும் 1,500 ரூபாய் பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். பெண்கள் இல்லாத வீட்டில் ஆண்களது அக்கவுண்டில் சேர்க்கப்படும் என்று புதிய இரண்டு திட்டங்களை கூறியுள்ளார்.

More News >>