ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மார்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகள் அவருக்கு நடத்தப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , 75 வயதான இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் முழு மருத்துவ நோயறிதலும் பிற பரிசோதனைகளும் முடியும் வரை மருத்துவமனையிலேயே தங்கியிருப்பார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்த விஷயங்களை கவனித்து வருகிறார்கள் என்று மருத்துவமனை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இது குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, ஜனாதிபதியின் மகனை தொடர்பு கொண்டு, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். உடல்நலம் பெற வேண்டிகொள்வதாக மோடி கூறியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

More News >>