12 கோடி பார்வையாளர்களை கடந்த என்ஜாய் எஞ்சாமி பாடல்!

யூடியூப்பில் அண்மையில் வெளியாகி "என்ஜாய் எஞ்சாமி" பாடல் சர்வதேச அளவில் 123,184,729 பார்வையாளர்களை கடந்துள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் யூடியூப்பில் மாஜா (maajja) என்ற சேனலை துவங்கியுள்ளார். முதல் பாடலாக "என்ஜாய் எஞ்சாமி" பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இப் பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

ஒரு பாட்டி தனது பேரனுக்கு சொல்லும் கதைகளில் இருந்து எடுக்கப்பட்ட வரிகளின் பின்னணியில் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. எஞ்சாமி என்ற வார்த்தையானது, எனது பாட்டி அன்பாக பயன்படுத்தும் ஒருசொல் என்று அப்பாடலை எழுதிய அறிவு தெரிவித்திருக்கிறார்."என்ஜாய் எஞ்சாமி" பாடலை அறிவுடன் இணைந்து சந்தோஷ் நாராயணின் மகள் தீ பாடியுள்ளார்.

யூடியூப் தளத்தில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளியிடப்பட்ட இப்பாடல், ஒரு மாதத்தில் சர்வதேச அளவில் 123,184,729 பார்வையாளர்களை கடந்துள்ளது. ஒரு பாடல் இந்த அளவுக்கு இசை ரசிகர்களால் கொண்டாடப்படுவது இதுவே முதல் முறை.

ஒரு சுயாதீன கலைஞரின் வாழ்க்கை எப்பொழுதும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளான ரசிகர்களுடன் முடிந்துவிடும். ஆனால், இன்றைக்கு இப்பாடல் அடைந்திருக்கும் இடம் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்திற்கு பாடல் எழுதுவதற்கும், சுயாதீனமான பாடல்கள் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இதுபோன்ற ஒருதளத்தை உருவாக்கியதற்காக மாஜா தளத்துக்கும், அதன் மேற்பார்வையாளராக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றி என அறிவு தெரிவித்துள்ளார்.

More News >>