சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிரீன் கப்பல் பறிமுதல்

உலகின் அதிமுக்கிய கடல் வாணிப பாதைகளில் ஒன்று எகிப்பு நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய்.ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் நீர்வழித்தடமான சூயஸ் கால்வாய், மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலை இணைக்கும் வழி பாதையாக உள்ளது.

கடந்த மே மாதம் 23 ஆம் தேதி ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான, உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான எவர் கிரீன் என்ற சரக்கு கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக சென்றது. அப்போது காற்றின் வேகம் காரணமாக தடுமாறிய கப்பல் கால்வாயின் குறுக்கே திரும்பி பக்கவாட்டில் தரை தட்டி நின்றது.

எவர் கிரின் கப்பல் தரைத்தட்டி நின்றதால் அவ்வழியாக மற்ற கப்பல்கள் செல்ல முடியாமல் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் காத்திருந்தன. இதனால் சர்வதேச நாடுகளின் வர்த்தகத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டது.

எவர் கிரின் கப்பலை மிதக்கும் நிலைக்கு கொண்டு வர சூயஸ் கால்வாய் ஆணையமும், ஸ்மித் சால்வேஜ் என்ற டச்சு நிறுவனம் இழுவை படகுகள் உதவியுடன் நகர்த்தப்பட்டன. இதற்காக 10 லட்சத்து 60 ஆயிரம் கனமீட்டர் அளவிற்கு மணல் தோண்டப்பட்டன. 6 நாட்கள் தீவிர முயற்சிக்கு பின் தரைதட்டி நின்ற கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியது.

எவர் கிரீன் கப்பல் தரை தட்டியதால் ஏற்பட்ட பாதிப்பு, நீர்வழிப்போக்குவரத்து தடைபட்டதால் ஏற்பட்ட இழப்பு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு எவர் கிரீன் கப்பல் உரிமையாளர் 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு தரவேண்டும் என்று சூயஸ் கால்வாய் நிர்வாகம் சார்பில் எகிப்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு எகிப்து நீதிமன்றம், இழப்பீடு வழங்கும் வரை கப்பலை பறிமுதல் செய்ய எகிப்து அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, எவர் கிரீன் கப்பல் சூயஸ் கால்வாய் நிர்வாக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

More News >>