திடீர் மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை!

நகைசுவை நடிகர் விவேக், நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர் பேசிய அவர், ``அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து பயம் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் நேராது. அனைவரும், முக கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள்" எனப் பேசியிருந்தார். இதற்கிடையே, நடிகர் விவேக்கிற்கு இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

இன்று காலை சினிமா பட்டபிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட விவேக்கிற்கு படப்பிடிப்பு தளத்தில் வைத்து திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது உடனடியாக அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். இதை கேள்விப்பட்ட அவரது மனைவி மற்றும் மகள் அவரை அனுமதித்துள்ள வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். எனினும் தற்போது அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய எக்மோ சிகிச்சை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News >>