IPL : பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வெற்றி

IPL கிரிக்கெட் தொடரில் பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

14 வது IPL கிரிக்கெட் போட்டியின் 11 வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷாப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி பஞ்சாப்பின் இன்னிங்சை கேப்டன் லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் தொடங்கினர். 10.1 ஓவர்களில் பஞ்சாப் 100 ரன்களை கடந்தது.

இறுதி ஓவரில் தமிழக ஆல்-ரவுண்டரான ஷாருக்கான் 2 பவுண்டரியும், ஒரு சிக்சரும் தட்டிவிட்டு அணியின் ஸ்கோர் 190 ரன்களை உயர்த்தினார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது.

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய, டெல்லி அணிக்கு ஷிகர் தவானும், பிரித்வி ஷாவும் 5 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கத்தை ஆரம்பித்து வைத்தனர். தவான் 92 ரன்களிலும், ஸ்டீவன் சுமித் 9 ரன்களிலும் வெளியேறினார். கேப்டன் ரிஷாப் பண்டும் 15 ரன்களில் வெளியேறினார்.

டெல்லி அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 198 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மார்கஸ் ஸ்டோனிஸ் 27 ரன்னுடனும், லலித் யாதவ் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

3-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணிக்கு இது 2-வது வெற்றி. பஞ்சாப்பிற்கு இது 2 வது தோல்வி,

More News >>