யுவன் இயக்கத்தில் சன்னி லியோன் நடிக்கும் புதிய படம் – எதிர்பார்ப்பில் கோலிவுட்!

சிந்தனை செய் படப்புகழ் இயக்குநர் யுவன் இயக்கத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.

கோவிட் கேரளாவில் வேகமாக பரவிவரும் நிலையில், படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ளார் சன்னி லியோன். இதுவொரு மலையாளப் படம். இதற்கு முன் மம்முட்டியின் மதுரராஜாவில் ஒரு பாடலுக்கு ஆடிய சன்னி லியோன், ரங்கீலா மலையாளப் படத்தில் நடித்தார். கோவிட் காரணமாக பாதி படப்பிடிப்புடன் படம் கிடப்பில் இருக்கிறது. இந்நிலையில், ஷீரோ படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.

இந்தப் படத்தை ஸ்ரீஜித் விஜயன் இயக்குகிறார். இதில் சன்னி லியோனின் வேடம் என்ன என்று கேட்டதற்கு தென்னிந்திய பெண்ணாக இதில் அவர் நடிக்கிறார் என்றார். ஷீரோ ஒரு சைக்கலாஜிகல் த்ரில்லர் திரைப்படம். இந்நிலையில் தமிழிலும் ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த 2009 ஆண்டு வெளியான சிந்தனை செய் படத்தின் வித்தியாசமான திரைக்கதையால் கவனம் ஈர்த்தார்.

அப்படத்தின் இயக்குநர் யுவன். விமர்சன ரீதியாக பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் கதர்னாக், ரணம் உள்ளிட்டப் படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிய யுவன் மீண்டும் தமிழில் ஹாரர் -காமெடி கலந்த படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்தின் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இதனால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே, தமிழில் ஜெய்யுடன் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு சன்னி லியோனி நடனமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர்கள் சதீஷ், மொட்டை ராஜேந்திரன்,ரமேஷ் திலக் உள்ளிட்டப் படலர் நடிக்கிறார்கள். சக்தி, சசிகுமார் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

More News >>