சமந்தாவின் சமத்து செயல்.. பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா சில மாதங்கள் முன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட கவிதா என்ற பெண், ``தான் ஆட்டோ ஓட்டி வருவதாகவும், தனக்கு 7 சகோதரிகள் இருப்பதாகவும், தனது பெற்றோர்கள் இறந்துவிட்டதால் ஆட்டோ ஓட்டி தான் குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும், தற்போது வரும் வருமானம் குடும்பத்தை காப்பாற்ற போதுமானதாக இல்லை" என்றும் வருத்தப்பட்டார்.

இதனை கேட்ட சமந்தா, கவிதா கவலைப்பட வேண்டாம் என்று கூறியதோடு, `அவருக்கு ஒரு கார் வாங்கி தருவதாகவும், அதை டிராவல்ஸ் ஆக வைத்து வருமானத்தை மேம்படுத்தி கொள்ளுங்கள் என்று உறுதி கொடுத்தார். இந்த வாக்குறுதியை நேற்று நிறைவேற்றி இருக்கிறார் சமந்தா. ஆம், கவிதாவுக்கு ரூ.12.5 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை பார்த்தவர்கள் சமந்தாவின் செயலை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

கொடுத்த வாக்குறுதியை ஏழை பெண்ணின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ள சமந்தா உண்மையிலேயே கிரேட் தான்!

More News >>