முன்னோடியாக தெலுங்கு திரையுலகம்.. பின்பற்றுவார்களா தமிழ் நடிகர்கள்!

அதிகரித்து வரும் கொரோனா நிலையை சமாளிக்க, தெலுங்கு திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் கொரோனா க்ரைஸிஸ் சேரிட்டி எனப்படும் தொண்டு நிறுவனம் ஒன்றை துவக்கியுள்ளனர். அதுவும் கொரோனா முதல் அலையால் விதிக்கப்பட்ட லாக் டவுன் காரணமாக சினிமா நம்பியிருந்த தொழிலாளர்கள் கஷ்டப்படுவதை தடுக்க, இந்த தொண்டு நிறுவனத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் மற்ற டோலிவுட் பிரபலங்களும் இதை தொடங்கி அப்போதே பல்வேறு உதவிகளை செய்தனர்.

இப்போதும் இதேபோல் ஒன்றை செய்ய இருக்கின்றனர். அதாவது, தாங்கள் ஆரம்பித்த தொண்டு நிறுவனம் மூலம் சினிமா கலைஞர்கள், தொழிலாளர்கள், திரைத்துறை சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இருக்கின்றனர். இதற்காக அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து தடுப்பூசி இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ள அவர்கள், அதன்மூலம் 45 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களும், அவர்களின் மனைவி அல்லது கணவர்களும் தடுப்பூசி எடுத்து கொள்ளலாம் என அறிவித்து இருக்கின்றனர்.

தமிழ் சூப்பர் ஸ்டார்கள் இப்படி செய்வார்களா?!

More News >>