ஒரே கதாபாத்திரம் ஒரே ஷாட் – ஹன்சிகாவின் புதிய முயற்சி!

ஹன்சிகா நடிக்கும் புதிய திரைப்படத்தில் ஒரே ஷாட்டில், ஒரே கதாபாத்திரத்தை மையமாக கொண்டு படம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து வேலாயுதம், எங்கேயும் காதல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார்.

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. தற்போது அவர் கைவசம் `மஹா' என்கிற படம் மட்டும் உள்ளது. இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து தெலஉங்கில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் ஹன்சிகா. அந்த படத்துக்கு 105 மினிட்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு, ஒரே ஷாட்டில் படமாக்கபட உள்ளதாம். தெலுங்கு ரசிகர்களுக்கு இது புதுவிதமான அனுபவமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

திரில்லர் படமாக உருவாகும் இதை ராஜா துஷ்ஷா இயக்குகிறார். ஒரே ஷாட்டில் எடுக்கப்படும், ஒரு கதாப்பாத்திரம் நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்கிற சாதனையை இந்தப் படம் படைக்கவுள்ளது.

இதேபோல் தமிழில் நடிகர் பார்த்திபன் இயக்கி, நடிக்கும் இரவின் நிழல் என்கிற படமும் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More News >>