கொரோனாவிலிருந்து மீண்டார் சோனு சூட் - மீண்டும் சமூக சேவை!

பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ளதை சைகையில், வித்தியாசமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல உதவிகளை செய்தவர் சோனு சூட். கடந்த சில நாட்களுக்கு முன் சோனு சூட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

கடந்தாண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. ஊரடங்கின் போது பாலிவுட் வில்லன் நடிகரான சோனு சூட் தனது மனிதநேயம் மிக்க செயல்களின் மூலம் மக்கள் மனதில் ஹீரோவாக உயர்ந்தார். ஊரடங்கின் போது மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்தார். இதனிடையே அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. கொரோனா உறுதியான நேரத்திலும் மற்றவர்களுக்கு உதவி வந்தார் சோனு சூட்.

அண்மையில், தெலங்கானாவை சேர்ந்த ரசிகர் ஒருவர் குறை பிரசவத்தில் பிறந்த தன்னுடைய குழந்தைக்கு உதவி செய்யுமாறு ட்விட்டரில் சோனுவை டேக் செய்து பதிவு செய்திருந்தார். குழந்தையின் வீடியோவையும் அதில் பதிவிட்டிருந்தார். அந்தப்பதிவில், “ சோனு சார்.. நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன். எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

7 மாதத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு வயிற்றில் தொற்று ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து எனக்கு எதாவது உதவி செய்யுங்கள்” எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு உடனே பதிலளித்த சோனு, “ உங்கள் குழந்தைக்கு நாங்கள் பொறுப்பு” எனக் கூறியுள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் மற்றொரு பதிவை பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது கொரோனா பரிசோதனை செய்து இருக்கிறார். அதில் அவருக்கு நெகட்டிவ் என்று வந்திருக்கிறது. இதை மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சோனு சூட் பதிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக டிவிட்டரில் தனக்கு நெகட்டிவ் வந்துள்ளதை சைகை மூலமாக தெரிவித்துள்ளார்.

More News >>