சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய திமுக பிரமுகரை பின்னி பெடலெடுத்த உறவினர்கள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் சோமசெல்வப் பாண்டி. இவர் திமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினராகவும், மாவட்ட நெசவாளர் பிரிவு துணைச் செயலாளராகவும் உள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்து தனியே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தினசரி சாப்பிடுவது அவரது வழக்கம். நீண்ட காலமாக அந்த உணவகத்திலேயே அவர் சாப்பிட்டு வருவதால் உணவக உரிமையாளர் குடும்பமும் அவருடன் நெருங்கிப் பழகியுள்ளது.

இந்நிலையில், உணவக உரிமையாளரின் பிளஸ் 2 படிக்கும் மகளின் வாட்ஸ் அப் எண்ணிற்கு சோமசெல்வப் பாண்டி கடந்த சில நாட்களாக ஆபாசப் படங்கள், வீடியோக்கள் அனுப்பியுள்ளார்.

வேறு யாருக்கோ அனுப்புவதற்கு பதிலாக நமக்கு அனுப்பியிருக்கிறார் என சிறுமி முதலில் நினைத்துள்ளார். ஆனால் தவறாமல் தொடர்ந்து அனுப்பிதுடன், ஆசைவார்த்தை கூறி வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதையடுத்து, தனது பெற்றோரிடம் கூறி சிறுமி அழுதுள்ளார்.

இதனா, ஆத்திரமடைந்த பெற்றோர், சோமசெல்வப் பாண்டி வீட்டிற்கு சென்றுள்னர். அங்கு ஹாயாக தூக்கிக் கொண்டிருந்த சோமசெல்வப் பாண்டியனை மிதித்து தும்சம் செய்தனர். சிறுமியின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சுற்றி வளைத்து அவரை சரமாரியாக பின்னி பெடலெடுத்தனர். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சங்கரன்கோவில் வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.

More News >>