நக்மா தமிழ்நாட்டில் போடாதிங்க மண்ணு! - டி.ராஜேந்தர்

தமிழ்நாடு ஒரு கண்ணு, கர்நாடகம் ஒரு கண்ணு, என்று நக்மா சொல்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் போட்டுடாதிங்க மண்ணு என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

இது குறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய இலட்சிய திமுக கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர், “நான் அரசியல்வாதி என்பதை விட ஒரு ஆன்மீகவாதி, கர்நாடகத்தில் இருப்பது காங்கிரஸ் அரசு, இங்கு எதிர்கட்சி கூட்டணியில் இருப்பது திருநாவுக்கரசு இவர்கள் நினைத்தால் கர்நாடகத்தில் பேசக்கூடாதா? காங்கிரஸ் தமிழகத்தில் மனித சங்கிலி நடத்தினார்கள், இது மனித சங்கிலியா மைனர் சங்கிலியா?

தமிழ்நாடு ஒரு கண்ணு, கர்நாடகம் ஒரு கண்ணு, என்று நக்மா சொல்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் போட்டுடாதிங்க மண்ணு. கர்நாடகத்தில் தேர்தல் நடக்கும் வரை காவிரி மேலாண்மை கிடைக்காது. இவர்கள் இங்கு கபட நாடகம் ஆடுகிறார்கள்.

சிம்பு ஒரு அரசியல்வாதி கிடையாது அவர் ஒரு நடிகர், அவரது மனித நேய குரலுக்கு கர்நாடக மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். தமிழக அரசு என்பது பிஜேபி-ன் ஊதுகுழல், ஆளும் கட்சியை எதிர்த்து எதிர்கட்சி என்ன செய்கிறது. இங்கு அனைவரையும் ஆட்டுவிப்பது மோடி” என்று கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>