இரவு ஊரடங்கு காரணமாக திருச்சியில் விமானங்கள் இயங்க தடை

ஊரடங்கு காரணமாக திருச்சி விமானநிலையத்தில் இரவு நேரத்தில் விமானங்கள் இயங்க விதிக்கப்பட்ட தடை நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது.

தமிழகம் கொரோனா தொற்று பரவல் இரண்டாம் அலை காட்டுத் தீ போல் பரவியது. இதையடுத்து கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்க கடந்த 20 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் உள்ளது.

இரவு நேர ஊரடங்கின் போது தனியார் பொது போக்குவரத்து ஆட்டோ, டாக்சிக்கு அனுமதி இல்லை. மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி போன்றவை அனுமதிக்கப்படுகிறது.

இதனிடையே, திருச்சி விமான நிலைய ஓடுதளம் பலப்படுத்தும் பணி நடைபெற்று வந்ததால் இரவு 11.30 மணி முதல் காலை 8 மணி வரை விமானங்கள் தரை இறங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை விமானகள் இயக்க விமான நிலைய ஆணையத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரக்கட்டுப்பாடு நேற்று இரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>