பிரபல நடிகரின் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பா ??nbsp

நடிகர் அக்சய் குமார் புதிதாக நடித்து வரும் படம் "கேசரி". புனேவில் உள்ள சடாரா கிராமத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. ஆக்சன் காட்சிக்காக பிரமாண்ட செட் ஒன்று போடப்பட்டது. படத்தில் குண்டு வெடிப்பது போன்ற காட்சி உள்ளது அதற்காக ஏற்பாடுகள் நடந்தன. குண்டும் சரியான நேரத்தில் படத்திற்காக வெடிக்க செய்தனர் . ஆனால் எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததும் தீ பரவ துவங்கியது. தீ மளமளவென பரவி படத்திற்காக போடப்பட்ட செட் முழுவதும் பற்றி எரிய துவங்கின. வேகமாக செயல் பட்ட தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். படப்பிடிப்பில் அக்சய் குமாரும் இருந்தார். நல்ல வேலையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் படப்பிடில் கவனமுடன் செயல் படுங்கள் என்று போலீஸார் எச்சரித்து சென்றுள்ளதாக தகவல்கள் தீயாய் பரவுகின்றன.  சில நாட்களுக்கு முன்பு விவசாய பயன்பாட்டிற்காக கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து குளம் வெட்டி வருவதை கண்ட அக்சய் குமார் தனது பங்கிற்கு நிதி உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
More News >>