சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்

சமீபத்தில் நடிகர் ராமராஜன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளிக்கையில் தான் எதற்காக நளினியை பிரிந்தேன் என்பது பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில், நளினி திருமணத்திற்கு பிறகு நடிக்கப் போக மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்ததால்தான் நான் திருமணத்திற்கு சம்மதித்தாக ராமராஜன் தெரிவித்துள்ளார்.

ஆனால், திருமணத்திற்கு பிறகு நான் நடிக்க போவதாக சொன்னார் என்றும் அது தனக்கு திருப்தியாக இல்லை என்றும் நடிகர் ராமராஜன் கூறியுள்ளார். தன்னுடைய பெற்றோரும் நளினி நடிப்பதை விரும்பவில்லை என்றும் திருமணத்திற்கு முன்பே நடிப்பேன் என்று கூறியிருந்தால் கூட பரவாயில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தான் நாங்கள் விவாகரத்து செய்து விட்டதாகவும், தங்களுக்கு விவாகரத்தாகி 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது என்றும் ராமராஜன் தெரிவித்துள்ளார். இப்போது, நளினி ஏதாவது கேட்டால் தான் பதில் மட்டும் சொல்வதாகவும், தங்களுக்குள் இப்போது வேறு எதுவும் இல்லை என்றும் ராமராஜன் கூறியுள்ளார்.

More News >>