பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்

நாற்கரப்போர் என்ற புதிய படத்தினை இயக்குநர் ஸ்ரீ வெற்றி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் குழுவினர் செய்தியாளர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நிகழ்ச்சியில் சுரேஷ் காமாட்சி பேசுகையில், இந்த படத்தில் நடிகை அபர்ணதியும் சிறப்பாக நடித்துள்ளார் என்றும் ஆனால் அவர் இன்றைய நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பது வருத்தத்தை தருகிறது என்றார்

படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகையை தயாரிப்பாளர் அழைத்த போது, நடிகை அபர்ணதி தனக்கு 3 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால்தான் வர முடியும் என்று பதிலளித்ததாகவும் சுரேஷ் காமாட்சி கூறினார்.

இது குறித்து தயாரிப்பாள தன்னிடம் கூறியதும்,அபர்ணிதியை தொடர்புகொண்டு பேசி படத்தின் புரோமஷனுக்கு வரவேண்டும் என்று தான் கேட்டு கொண்டதாகவும், அப்போது, மேடையில் தனக்கு அருகில் சமமானவர்கள்தான் அமர வேண்டுமென்று நடிகை அபர்ணிதி வேண்டுகோள் வைத்ததாக சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.

அதோடு 3 லட்சம் கொடுத்தால் மட்டுமேதான் வரமுடியுமென்றும் அபர்ணிதி கூறியதாகவும், தான் அதற்கு மறுத்து விட்டதாகவும் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இரு நாள்களுக்கு பிறகு அந்த நடிகையே போன் செய்து புரமோஷனுக்கு வருவதாக தன்னிடம் கூறியதாகவும் , ஆனால், சொன்னபடி புரமோஷனுக்கு வரவில்லை என்றும் சுரேஷ் காமாட்சி குறை கூறினார். இது போன்ற நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு தேவையே இல்லை என்றும் சுரேஷ் காமாட்சி வேதனையுடன் கருத்து தெரிவித்தார் .

More News >>