சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்

சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி கபா . சினிமா தயாரிப்பாளரான இவருக்கு சினிமா தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவிந்தர் சந்திரசேகர் அறிமுகமானார். நாளடைவில் தொழில் தொடங்குவதற்காக பார்ட்னட்ராக சேரும் அளவுக்கு நெருக்கம் கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் தொடங்க இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறி, போலியான ஆவணங்களை காண்பித்து, தன்னிடத்தில் 16 கோடியை பெற்றுக் கொண்டதாக ரவீந்தர் சந்திரசேகர் மீது பாலாஜி போலீசில் புகார் அளித்தார். ரவீந்தரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளி வந்த சந்திரசேகர் சிறையில் பாத்ரூம் போக தான் படாத பாடு பட்டதாக வேதனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் , சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக கிடைத்த தகவலின் படி நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், பென் டிரைவ் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது

More News >>