போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் பீர் முகம்மது. இவர் தனது வீட்டுக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை சிறார்வதை செய்தது சம்பந்தமாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே ,சிறுமியை சிறார்வதை செய்த பீர் முகம்மதுவை அப்பகுதியில் உள்ள முஸ்லிம் ஜமாஅத் அலுவலகத்தில் தூணில் கட்டி வைத்தும், அவரைச் சுற்றி சிலர் அமர்ந்து பஞ்சாயத்து செய்ததாக புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சுமார் ஒன்றரை மணி நேரம் அவரை கட்டி வைத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பீர் முகமதுவின் வீட்டை ஆறு லட்சம் ரூபாய்க்கு இரவோடு இரவாக விற்று அதில் மூன்று லட்சத்தை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது .

இதையடுத்து, தனது வீட்டை விற்கச் சொல்லி மிரட்டுவதாகவும், தனது கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பீர் முகம்மதுவின் மனைவி பாத்திமா தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாகவும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

More News >>