இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்

கர்நாடகத்தில் பள்ளிக்கு இரட்டை ஜடை போடாமல் வந்த மாணவிகளின் முடியை ஆசிரியர்கள் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் ராமநகர மாவட்டத்தில் அரலூலு சந்திரா என்ற கிராமத்தில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் இரட்டை ஜடை போட்டு வர வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஜூலை 26 ஆம் தேதி மூன்று மாணவிகள் இரட்டை ஜடை போடாமல் வந்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்து பவித்ரா என்ற ஆசிரியை சிவக்குமார் என்ற உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் சேர்ந்து மாணவிகளின் முடியை வெட்டியுள்ளனர். இதனால் , அந்த மாணவிகள் அவமானத்தில் கூனி குறுகி போனார்கள். தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் கொதித்து போய் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். புகாரையடுத்து, இரு ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

More News >>