தென்காசியில் நாளை என்ன நடக்கும்? எச்சரிக்கை விடுக்கும் கலெக்டர்
தென்காசி மாவட்டத்தில் நாளை ( மார்ச் 11) பரவலாக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், மக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கியுள்ளார். அவர் கூறியிருப்பவதாவது, கனமழை காலங்களில் பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும், இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும்போது, திறந்த வெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.மழை வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது. வெள்ளபெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
பொதுமக்கள் தங்களது ஆதார் குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.பேரிடர் காலங்களில் பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்களை 04633- 290548 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, மழை வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணி புரிவார்கள் . சம்பந்தப்பட்ட துறைக்கு நேரடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.தொலைபேசி எண்கள் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, மழை வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணி புரிவார்கள் . சம்பந்தப்பட்ட துறைக்கு நேரடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.