ஆட்டோ டிரைவர் குடும்பத்தில் விளையாடிய பா.ஜ.க பிரமுகர்: நாகர்கோவில் போலீசார் காப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகேயுள்ள பத்துகாணி பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் என்ற அனிகுட்டன் ( வயது 48). இவர், ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி தன்யா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் கிளை செயலாளர் மதுக்குமார் என்பவருக்கும் தொடர்பு இருந்துள்ளது.

கணவர் முன்னாலேயே இருவரும் அப்படி இப்படி என்று இருந்துள்ளனர். இதை, அனி குட்டன் நேரில் பார்த்தது அதிர்ச்சியடைந்தார். இதனால், தம்பதிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது. தொடர்ந்து, மதுக்குமார் அனிகுட்டனை வாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் மதுகுமாரை போலீசார் கைது செய்தனர்.

ஜாமீனில் வந்த மது குமாருக்கும் தன்யாவுக்கும் மீண்டும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அனிகுட்டன் மனைவியை கம்பியால் சரமாரியாக தாக்கினார். பின்னர், மனைவி இறந்துவிட்டதாக கருதி அனிகுட்டன் வீட்டில் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் , தன்யா கேரள மாநிலத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக , ஆறுகாணி போலீசார் வழக்கு பதிவு செய்து மதுக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மதுக்குமைரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ,அவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

More News >>