தடகளப்போட்டி : நாகர்கோவில் பெண் இன்ஸ்பெக்டர் அபாரம்
இந்திய அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்ற பெண் உதவி ஆய்வாளருக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இந்திய முதுநிலை தடகள கூட்டமைப்பு சார்பில் தடகளப் போட்டி நடந்தது. இதில், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கீதா 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதல் பரிசு, 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இரண்டாம் பரிசு, 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இரண்டாம் பரிசு மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டாம் பரிசு பெற்றார். பல போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . இரா. ஸ்டாலின் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.