இரணியல் அருகே : பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி 

கன்னியாகுமரியில் இருந்து இன்று காலை 5 மணிக்கு மங்களூர் செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இரணியல் ரயில் நிலையம் அருகே ரயில், சென்றபோது  தண்டவாளத்திற்கிடையே கற்கள்  வைக்கப்பட்டிருப்பதை  கண்ட லோகோ பைலட்  உடனடியாக,   ரயிலை உடனே நிறுத்தினார் . இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது . தொடர்ந்து, லோகோ பைலட் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து  தகவல் தெரிவித்தார்.  அதிகாரிகள் அந்த பகுதிக்கு. விரைந்து சென்று  தண்டவாளத்தில் இருந்த கற்களை எடுத்து அகற்றினர். பின்னர்,  ரயில் புறப்பட்டு சென்றது. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More News >>