மே 16 முதல் மக்களுடனான பயணம்: கமல்ஹாசன் அறிவிப்பு

வரும் மே 16ம் தேதி முதல் மக்களுடனான பயணம் என்ற பெயரில் பல்வேறு நகரங்களுக்கு சென்று சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் இருந்து அரசியலில் குதித்த கமல்ஹாசன் கட்சி பெயர், சின்னம் அறிவிப்பு முதல் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் அதிரடியாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் மாதிரி கிராம சபை நடத்தி உள்ளாட்சி அமைப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பேசினார். விரைவில் வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட இருப்பதாகவும் கமல் கூறினார்.

இந்நிலையில், மக்களுடனான பயணம் என்ற பெயரில் அடுத்த மாதம் 16ம் தேதி கன்னியா குமரியில் சுற்றுப்பயணத்தை அவர் தொடங்க இருக்கிறார். தொடர்ந்து, 17ம் தேதி தூத்துக்குடி, 18ம் தேதி திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு செல்கிறார்.

இதையடுத்து, இரண்டாம் கட்டமாக ஜூன் மாதம் 8ம் தேதி திருப்பூர், 9ம் தேதி நீலகிரி மற்றும 10ம் தேதி கோயம்பத்தூர் ஆகிய ஊர்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>