கன்னியாகுமரி: ஆசாரி பள்ளம்  அரசு மருத்துவமனையில் சிறை வாசிகள் சிகிச்சை பிரிவு 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்டாலின்  கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆசாரிபள்ளம் வளாகத்தில் சிறை வாசிகள் சிகிச்சை வார்டை(CELL WARD) திறந்து வைத்தார்

சிறைவாசிகள் சிகிச்சை வார்டு என்பது காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. சிறைவாசிகளை பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளிப்பதற்காக இது திறக்கப்பட்டுள்ளது . இந்த வார்டில் ஒரே நேரத்தில் 9  பேர் சிகிச்சை பெரும் வகையில்  படுக்கை வசதி கழிவறை ஆகியவை உள்ளது.  காவலர்களுக்கு தனி அறை செவிலியர்களுக்கு தனி அறை அமைக்கப்பட்டுள்ளது.  சிசிடிவி கேமெராக்கள் பொறுத்தப்பட்டு இந்த வார்டு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன்  டாக்டர். ராமலட்சுமி   டாக்டர் . கிங்ஸ்லி ஜெபசிங் . மருத்துவமனை டாக்டர் .ஜோசப்சென்  உறைவிட மருத்துவ அலுவலர், விஜயலட்சுமி  உதவி உறைவிட மருத்துவ அலுவலர்  ரெனிமோள்  உதவி உறைவிட மருத்துவ அலுவலர்  சுஜாதா பங்கேற்றனம்.

More News >>