கன்னியாகுமரி : தண்ணீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் ஊரில்  பல நாட்கள் ஆகியும் முறையாக  குடிநீர் வினியோகம் செய்யாதை  கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை  மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து. பாதிப்பு ஏற்பட்டது . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்  பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் கைவிடப்பட்டது/ போராட்டத்தில்  விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில பொறுப்பாளர்  காளியப்பன் ,மாவட்ட தலைவர் துறை. கார்த்திக் மற்றும் ஏராளமான பெண்கள். பொதுமக்கள் கலந்து கொண்டனர்

More News >>