தினகரனுக்கு எதிராக 20 ரூபாய் போராட்டம்: ஆர்.கே.நகரில் பரபரப்பு

ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி.தினகரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொகுதிக்கு வந்தபோது, பொதுமக்கள் 20 ரூபாய் நோட்டைக் காட்டி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றிபெற்றார். ஆனால், ஓட்டுக்கு ரூ.20 நோட்டை டோக்கனாக கொடுத்து ரூ.10 ஆயிரம் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வெற்றிபெற்றார் என்று எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. டிடிவி தினகரன் தரப்பினர் இதனை மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று [ஏப்ரல் 29] அன்று தினகரன் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்தார். அப்போது பொதுமக்களில் சிலர் தினகரனுக்கு 20 ரூபாய் நோட்டை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>