கோபாலசமுத்திரம் உயர்நிலைப் பள்ளியில் மரங்கள் வெட்டி அழிப்பு தன்னார்வலர்கள் கொந்தளிப்பு 

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களாக மரங்கள் வெட்டப்படுவ்து மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் நிவேக் இதுகுறித்து கூறியதாவது,  " கடந்த சில நாட்களாக எனது சொந்த கிராமமான கோபாலசமுத்திரத்திள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பெரிய பெரிய வளர்ந்த மரங்கள் வெட்டப்படுவதாக தகவல் கிடைத்தது. உடனே, அங்கு போய் பார்த்தேன். தலையில இடி இறங்கின மாதிரி ஒன்பது மரங்களை வெட்டி இருந்தார்கள். கிளை  ஓட்டில் படுகிறது தொந்தரவாக இருக்கிறது கிளையை மட்டும் வெட்டாமல்  மொத்த மரத்தையும் வேரோடு சாய்த்துள்ளனர். 

பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, "மாணவர்கள் மீது கிளை விழுந்துரும் அதனால வெட்டுறோம்" என்ற மழுப்பலான பதில் வந்தது-  சரி சார் இதுக்கு மேல எந்த மரங்களையும் வேரோடு வெட்டாதீங்க, தேவைனா தொந்தரவா இருக்கிற கிளைகளை மட்டும் வெட்டுங்கனு சொன்னோம். 

மீண்டும் மாலை தன்னார்வலர்  கிருஷ்ணன் பாலுவிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. மைதானத்திலுள்ள மரத்தையும் வெட்டிக்கிட்டு இருக்காங்க நிவேக் சீக்கிரம் வாங்க," என்று அழைத்தார்.  உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, கிரவுண்டில் இருந்த மரம் பாதியாக வெட்டப்பட்ட நிலையில், தொடர்ந்து மரம் அறுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இனியும் இவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை என்னும் பட்சத்தில் மரம் அறுப்பவர்களிடம் மீண்டும் ஒரு மரத்தின் மீது கை வைத்தால் உங்களை சும்மா விட மாட்டோம் என்று சொல்லிவிட்டு அங்கேயே காத்திருந்தோம். 

இதற்கிடையில், ஊரைச் சேர்ந்த வயதான சில பெரிய மனிதர்கள் பள்ளி நிர்வாகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மரங்களை வெட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தினர் .  பள்ளி நிர்வாகம் தரதப்பில் மரம் வெட்டுவதை தடுத்தால் போலீசில் புகார் கொடுப்போம் என்று பதில் கூறியுள்ளார். தொடர்ந்து இது போன்ற இயற்கை சீர்கேடுகளுக்கு எதிராக குரல் கொடுப்பதே எனது  கடமை. எந்த ஒரு மிரட்டலுக்கும் அடிபணிய போவதில்லை '' என்று தெரிவித்தார்.

More News >>