தினகரனும், திவாகரனும் கட்சிகளால் ஒரு பயனும் இல்லை - ஜெயக்குமார்

தினகரனும், திவாகரனும் புதிய கட்சிகள் தொடங்குவதால் மக்களுக்கு எவ்விதப் பலனுமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பாவேந்தர் பாரதிதாசனின் 128-வது பிறந்தநாளை ஒட்டி மெரினா கடற்கரையில் அவரின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. நீதிமன்றத் தீர்ப்பை காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சனம் செய்யக்கூடாது.

தினகரனும், திவாகரனும் புதிய கட்சிகள் தொடங்குவதால் மக்களுக்கு எவ்விதப் பலனுமில்லை. அதனால் எங்களுக்கு அவர்களைப் பற்றிக் கவலையில்லை. தமிழக மக்கள் மனதில் அதிமுக அரசுதான் இருக்கும். அதிமுக ஆட்சியில் மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>