நாகர்கோவில்: ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாரத்தன் போட்டி

இந்தியாவிற்காக எல்லையில் போராடிய ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் மற்றும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு அதிமுக சார்பில் இன்று ( மே 16)மாரத்தன் போட்டி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே தொடங்கியது.  சுமார் 5.7 கிலோமீட்டர்   தூரம் நடைபெற்ற  மாரத்தன் போட்டியை  மாமன்ற உறுப்பினர் அக்க்ஷயா கண்ணன் தலைமையில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் பள்ளி,  கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

More News >>