திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு புதிய ரயில் - நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் தகவல்

கங்கை நதி போல தாமிரபரணியையும் தூய்மைப்படுத்துவதற்கு மத்திய அரசு சிறப்பு நிதி தர முன்வந்துள்ளது. மாநில அரசு திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது. திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு சென்றடைந்ததும். சிறப்பு நிதி வழங்கப்படும் என ராபர்ட் புரூஸ் எம்.பி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், செய்தியாளர்களிடத்தில் இன்று பேசினார். அப்போது, கூறியதாவது,

தாமிரபரணி நதியைக் கங்கை நதியைப் போலச் சுத்தம் செய்யும் ஒரு சிறப்புத் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்க கோரியுள்ளேன். கோரிக்கையின் அடிப்படையில், மத்திய அரசு தமிழக அரசிடம் திட்ட அறிக்கையை அனுப்ப கூறியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இது குறித்து பேசியுள்ளேன். விரைவில் தமிழக அரசிடமிருந்து திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு, மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதி பெறப்பட்டதும் தாமிரபரணியைத் தூய்மைப்படுத்தும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பெங்களூருவில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்கும் நடைமுறைகள் குறித்துத் தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் பேசியுள்ளேன். விரைவில் , இந்த சேவை நீட்டிக்கப்படும்.தற்போது திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வரும் ரயில்கள் தவிர, கூடுதலாக ஒரு புதிய ரயில் திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படவுள்ளளது. கடந்த வாரம் அந்த ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. மிக விரைவில் இந்த புதிய ரயில் சேவை தொடங்கப்படும் .

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More News >>