திசையன்விளை யில் இந்து மகா சபை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்... பேரூராட்சி தலைவி ஜான்சிராணி தொடங்கி வைத்தார்!

திசையன்விளை யில் இந்து மகா சபை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்... பேரூராட்சி தலைவி ஜான்சிராணி தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை ராமகிருஷ்ணா மேல் நிலைப் பள்ளியில் அகில பாரத இந்து மகாசபை மற்றும் திருநெல்வேலி கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின நெல்லை மாவட்ட இந்து மகாசபை இளைஞர் அணி தலைவர்திசையன்விளை காரப்பொறி ஜெகன் அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக திசையன்விளை பேரூராட்சி மன்றத் தலைவி ஜான்சிராணி கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார்.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நிகழ்ச்சி யில் பேரூராட்சி துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் , அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் சாந்தகுமார், தொழிலதிபர்கள் தங்கையா முருகேசன், பிரதீப் ஸ்வீட்ஸ் முருகானந்தம், மணிகண்டன்,பி.டி.பி.பொன்ராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் லிவ்யா சக்திவேல் குமார், பிரேம்குமார் முத்துக்குமார்,பா.ஜ.க நிர்வாகிகள் ஜெகதீசன், சக்தி வேல் குமார்,ஆறு.செந்தில்,டி.சேகர்,ரெங்கனாதன், அகில பாரத இந்து மகாசபா மாநில பொதுச் செயலாளர் முத்தப்பா, நெல்லை மாவட்ட தலைவர் ரத்ன குமார், மாவட்ட பொதுச் செயலாளர் முருகேசன், ஆன்மீக பிரிவு தலைவர் பெருமாள், மாவட்ட செயலாளர் அய்யப்பன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆதி நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்துமகாசபை காரப்பொறி ஜெகன் செய்திருந்தார்.

More News >>