வேலூர் பகுதியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் குத்திக்கொலை

வேலூர் மாவட்டம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகேந்திரனை அரசு அலுவகத்தில் வைத்தே மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகேந்திரன் வேலை காரணமாக வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அலுவலகத்துக்குள் வந்த மர்ம நபர்கள் மகேந்திரனை வெட்டி கொலை செய்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ், மகேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளது. மகேந்திரனை கொலை செய்த மர்ம நபர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பான சுழல் நிலவுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>