முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டா?

சென்னை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வெடித்து விடும் என தொலைபேசி மூலம் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் கிரீன்வேஸ் சாலையில் குவிந்து, வெடிகுண்டு பரிசோதனையாளர்கள் வரவழைக்கப்படு வீடு முழுவதும் வெடிகுண்டு சோதனை நடைபெற்று உள்ளது.

சோதனை முடிவில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், அந்த தகவல் புரளி என்பது தெரியவந்துள்ளது. போலீசார் விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கடலூரை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>