வீரமங்கை குயிலி நினைவு தினம் காங். தலைவர் செல்வபெருந்தகை மரியாதை

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி வீரமங்கை குயிலி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் சி.டி . மெய்யப்பன், மாநில துணை தலைவர்கள் சொர்ணா சேதுராமன்,கீழானூர் ராஜேந்திரன்,விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட்,அமைப்பு செயலாளர் ராம்மோகன், அருள்பெத்தையா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வர்த்தக காங்கிரஸ் கன்னியா குமரி கிழக்கு மாவட்ட தலைவர் டாக்டர். சிவகுமார் உள்பட பல காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More News >>