நாங்குநேரி இரட்டை கொலை - யார் இந்த நவீன் ?
நெல்லை: நாங்குநேரியில் பெரும்பத்து கிராமத்தில் பட்டியலின தெருவில் புகுந்த 9 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். வட மாநில தொழிலாளி ஒருவரும், ஜான் மார்க் என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நவீன் வாழ்க, நவீன் வாழ்க என அந்த கும்பல் கோஷமிட்டபடியே பொதுமக்களை கொடூரமாகத் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. நவீன் என்பவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பிரபல ரவுடி எனக் கூறப்படுகிறது.
கொலைல சம்பவத்திற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்றும் தன்னை நெல்லைக்குள் வரக்கூடாது என போலீசார் கூறியுள்ளதாகவும் நவீன் விளக்கம் அளித்துள்ளார்.