சிறைச்சாலையில் ஓர் வானொலி மையம்: இது கைதிகளின் முயற்சி

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் கைதிகள் வானொலி மையம் ஒன்றை இயக்கி வருகின்றனர். இந்த முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அக்மத்நகர் சிறைச்சாலையில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் குற்றவாளிகளை ஒழுங்குப்படுத்தும் விதமாக பாடல்கள் மற்றும் பக்தி உபதேசங்கள் ஒளிப்பரப்பப்படுகிறது.

இதற்காக, சிறையில் இருக்கும் கைதிகளின் அறைகளில் ஒலிப்பெட்டி பொருத்தப்பட்டுள்ளன. இதனால், கைதிகள் அனைவரும் பாடல்கள் கேட்டு பயனடைந்து வருகின்றனர். இந்த வானொலி மையத்தில் கூடுதலாக சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அவ்வபோது ஒலிப்பரப்புகின்றன.

சிறைக்குள் வரும் கைதிகள் வெளியில் சென்ற பிறகு கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>