சில வண்டுகளை ஊசியால்தான் குத்தனும்... தினகரனை சாடும் ஜெயக்குமார்

அரசை மிரட்டும் தொனியில் பேசும் தினகரன் போன்ற வண்டுகளை ஊசியால்தான் குத்த வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சசிகலாவின் உறவினர்களான, திவாகரன் - தினகரன் இடையிலான கருத்து மோதல் நாளுக்குநாள் முற்றிக்கொண்டே வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் பல நிகழ்வுகளில் பங்கேற்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை செயலாளர் தினகரன், அரசு நிர்வாகம் குறித்து கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், குடும்ப சண்டையில் தலையிடுவது நாகரீகமற்றது என்றார். ஆனால், "அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தினகரன் பேசுவது சரியல்ல; இது போன்ற சில வண்டுகளை ஊசியால் தான் குத்தனும்" என்று அவர் சாடியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>