டெல்லியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

டெல்லி, உத்தரகாண்ட்டில் இன்று இரவு 8.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.

இது குறித்து புவியியல் ஆய்வு மையம், “கிழக்கு டெஹ்ராடூனில் இருந்து 121 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலில் 30 கிலோ மீட்டர் ஆழத்திலும்” இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டது. இதனால், மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளுக்கு ஓடிவந்தனர்.

More News >>