தாய் திட்டியதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை மரக்காணம் அருகே பரபரப்பு

மரக்காணம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்தவில் தோல்வியடைந்த பாடத்தை படித்து மீண்டும் தேர்வு எழுத சொல்லி தாய் திட்டியதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த விவசாயி ஜெயவேல். இவரது மகள் நர்மதா (16). இவர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தார். இந்நிலையில், நர்மதா மறுத்தேர்வுக்கு ஆயத்தமாகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனை கண்ட நர்மதாவின் தாய், தோல்வியடைந்த பாடத்தை படித்து மீண்டும் பொதுத் தேர்வு எழுதாமல் வீட்டிலேயே இருக்கிறாயே என அவரை திட்டி உள்ளார்.

இதனால் மனமுடைந்த நர்மதா யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அறைக்கு சென்ற நர்மதா மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். வெளியில் சென்றிருந்த பெற்றோர் நர்மதா இறந்திருப்பதை கண்டு கதறி அழுதனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து நர்மதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சம்வம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

More News >>