நான் உள்ளே போயிடுவேன்னு நினைச்சீங்களா?- சல்மான் கான் திமிர்!

மான் வேட்டை வழக்கின் தீர்ப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு சல்மான் கான் அளித்த திமிரான பதில் பலரது அதிருப்தியைப் பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் “ஹம் சாத் சாத் ஹயன்” என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு 1998ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி நடந்து கொண்டிருந்த போது சல்மான்கான் உள்ளிட்ட பல நடிகர்கள் அரிய வகை மான்களை வேட்டையாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஜோத்பூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது, அறிவிக்கப்பட்ட தீர்ப்பில், சல்மான்கானுக்கு 10 ஆயிரம் அபராதம், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஜோத்பூர் மத்திய சிறையில் சல்மான்கான் அடைக்கப்பட்டு இரண்டே நாட்களில் ஜாமீனில் வெளிவந்தார். 

தற்போது தன்னுடைய புதிய படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சிக்காக செய்தியாளர்கள் சந்திப்பில் சல்மான் கலந்துகொண்டார். அப்போது மான் வேட்டை வழக்கின் தீர்ப்பு குறித்து செய்தியாளரின் கேள்விக்கு, “நான் நிரந்தரமாக சிறைக்குச் சென்றுவிடுவேன் என நினைத்தீர்களா..?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது அங்கிருந்த பலரையும் அதிருப்து அடையவைத்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>