சினிமா பாணியில் சம்பவம் !ரூ.20லட்சம் கேட்டு சிறுமி கடத்தி கொலை-16வயது வாலிபர் வெறிச்செயல்

சண்டிகர்: சினிமா பாணியில், பணத்திற்காக சிறுமியை கடத்தி பின் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியானா மாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுமி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 16 வயது வாலிபன் சிறுமியை கடத்தி சென்றுள்ளான். அந்நேரத்தில், சிறுமியின் பெற்றோர் வெளியில் சென்றதாக தெரிகிறது. சிறுமியை கடத்திய வாலிபர், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினருக்கு போன் செய்து ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளான். இந்நிலையில், சிறுமியை கடத்திய சம்பவம் பெற்றோருக்கும் போலீசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வாலிபரை தேடி வந்தனர். அப்போது, போலீசார் தன்னை நெருங்கியதை வாலிபர் உணர்ந்துள்ளார். எங்கு சிறுமி கூச்சலிட்டு தன்னை அடையாளம் காண்பித்துவிட போகிறாள் என்ற அச்சத்தில், சிறுமியை தண்ணீர் தொட்டிக்குள் போட்டு மூழ்கடித்து வாலிபர் கொலை செய்துள்ளார். பின்னர், சிறுமியின் சடலத்தை வாட்டர் கூலரில் அடைத்து வைத்துள்ளான்.சிறுமியின் உறவினருக்கு வந்த மிரட்டல் அழைப்பு தொலைபேசி எண்ணைக் கொண்டு போலீசார் வாலிபரை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணியளவில் வீட்டில் எதுவுமே நடக்காததைப் போல் லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்த வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.மேற்கொண்டு வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில்,” தான் திரைப்படம் ஒன்று பார்த்தேன். அதில் குழந்தையை கடத்தி எளிதில் பணம் சம்பாதித்தது போன்ற காட்சி இருந்தது. அதேபோல் தானும் முயன்று எளிதில் பணம் சம்பாதித்து விடலாம் என்று எண்ணி சிறுமியை கடத்தினேன். எங்கு மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் சிறுமியை கொலை செய்துவிட்டேன்” என்று கூறினார்.

More News >>