ராஜ்தானி விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து

டெல்லியில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி சென்ற ராஜ்தானி விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள பிர்லா நகர் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திரப் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு விரைவு ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ரயிலின் ஏசி பெட்டியில் இருந்து தீ பற்றியுள்ளது. இதுகுறித்து உடனடியாக ரயிலில் இருந்த கார்டுக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து ரயில் நிறுத்தப்பட்டது.

தீ பற்றிய பெட்டிற்கு விரைந்த ரயில் ஊழியர்கள் ஏசி பெட்டியில் சிக்கி இருந்த பயணிகளை உடனடியாக இறக்கினர். மற்ற பெட்டிகளும் தீ பரவியதால் அனைத்து பெட்டிகளில் இருந்த பயணிகளையும் இறக்கிவிடப்பட்டனர். இதனால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும், தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குள் தீயணைப்பு வீரர்கள் விரைவதற்குள் தீ மளமளவென நான்கு பெட்டிகளுக்கு பரவியது. பின்னர், தீவிர முயற்சியில் தீ அணைக்கப்பட்டது.

இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>